தீ
தின்றுவிட்டது
சிலேட்டுகளை
பால் குச்சிகளை
நெஞ்சோடு சேர்த்தணைத்து
நாக்கு துருத்தி எழுதும்
இளந்தளிர்க் கரங்களை.
இந்த நெருப்பு எங்கிருந்து கிளம்பியது?
கூரையிலிருந்தா?
அடுப்பில் இருந்தா?
நமது பேராசைகளில் இருந்தா?
அலட்சியத்தில் இருந்தா?
பொய்களில் இருந்தா?
இந்த நெருப்பு எங்கிருந்து கிளம்பியது?
தயவுசெய்து இம்முறையும் இதை
கண்ணீரால் அணைக்கப்பார்க்காதீர்கள்.
ஜூலை 16, 2004
இந்த நெருப்பு எங்கிருந்து கிளம்பியது?
2 பின்னூட்டங்கள் »
RSS feed for comments on this post. TrackBack URI
😦
பின்னூட்டம் by சுந்தரவடிவேல் — ஜூலை 16, 2004 @ 6:47 பிப |
தீதின்றுவிட்டதுசிலேட்டுகளைபால் குச்சிகளைநெஞ்சோடு சேர்த்தணைத்துநாக்கு துருத்தி எழுதும் இளந்தளிர்க் கரங்களை.Touched my heart 😦
பின்னூட்டம் by Arun Vaidyanathan — ஜூலை 19, 2004 @ 11:03 முப |